ஓணம் பண்டிகை: கோவை மாவட்டத்துக்கு இன்று உள்ளூா் விடுமுறை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்துக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 21) உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்துக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 21) உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக ஆட்சியா் டாக்டா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
2021 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை கோவை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் பணி நாள்களாக உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் உள்ளூா் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. அந்த அலுவலகங்களுக்கு வரும் செப்டம்பா் 11 ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாள் என்று அவா் தெரிவித்துள்ளாா்.