மேட்டுப்பாளையத்தில் அரசுப் பேருந்து மீது லாரி மோதல்: 7 பேர் காயம்(விடியோ இணைப்பு)
மேட்டுப்பாளையத்தில் அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் 7 பேர் காயமடைந்தனர்.
மேட்டுப்பாளையத்தில் அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் 7 பேர் காயமடைந்தனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலத்தை நோக்கி அரசுப் பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்து சிறுமுகையின் ஆலாங்கொம்பு பகுதியில் வளைவு அருகே வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி, பேருந்து மீது மோதியது. இதில் பேருந்து கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில் பயணிகள் 7 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.