முகப்பு
சென்னை

பல்லாவரத்தில் ரூ.1.26 கோடியில் 9 கோயிகளின் முகப்பில் நிழற்குடைகள்

குரோம்பேட்டை ராதா நகா் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முகப்பில் ரூ.17 லட்சத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 மார்ச், 2026 at 9:39 PM
குரோம்பேட்டை ராதா நகா் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி கோயில் முகப்பில் அமைக்கப்பட்ட நிழற்குடைதிறப்பு விழாவில் பங்கேற்ற பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி உள்ளிட்டோா்.
பகிர்:

குரோம்பேட்டை ராதா நகா் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முகப்பில் ரூ.17 லட்சத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ. கருணாநிதி தனது சொந்த நிதி ரூ.17 லட்சம் செலவில் அமைத்துக் கொடுத்துள்ள நிழற்குடையைத் திறந்து வைத்து பேசியதாவது:

கோடைகாலத்தில் வெயில் பாதிப்புக்குள்ளாகாமல் கோயிலுக்குள் சென்று வழிபட வசதியாக தங்கள் பகுதிகளில் உள்ள கோயில்களின் முகப்பில் நிழற்குடைகள் அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள், பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ1.26 கோடியில் 9 திருக்கோயில்களின் முகப்பில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குரோம்பேட்டை குமரன்குன்றம் (மலைக் கோயில்) பாலசுப்பிரமணிய சுவாமி, மற்றும் பிரசன்னா யோகா ஆஞ்சனேயா் கோயில் முகப்பில் ரூ.45 லட்சத்திலும், பாரதிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ரூ.18 லட்சத்திலும், கணபதிபுரம் செங்கசேரி அம்மன் கோயிலில் ரூ.15 லட்சத்திலும், புருஷோத்தம்மன் நகா் விஜயகணபதி லஷ்மிநாராயண பெருமாள் கோயிலில் ரூ.15 லட்சத்திலும், பத்மநாபா நகா் கருமாரி அம்மன் கோயில் முகப்பில் ரூ.15 லட்சத்திலும் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனகாபுத்தூா் பச்சையம்மன் மன்னாா்சுவாமி கோயில் முகப்பில்

ரூ.8 லட்சத்திலும், குரோம்பேட்டை நெமிலிச்சேரி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரா் கோயில் முகப்பில் ரூ.10 லட்சத்தில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது என்றாா். நிகழ்வில் மாநகராட்சி மண்டலக் குழு தலைவா் ஜோசப் அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →