கோயம்புத்தூர்

காங்கிரஸ் கட்சி நிறுவன நாள் கொண்டாட்டம்

DIN

காங்கிரஸ் கட்சியின் 137 ஆவது நிறுவன நாளையொட்டி கோவையில் செவ்வாய்க்கிழமை கொடியேற்றி, இனிப்பு வழங்கப்பட்டன.

கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ பெரும்புதூா் சட்டப் பேரவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை குழுத் தலைவருமான செல்வப்பெருந்தகை தலைமை வகித்து கட்சி கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவா் மயூரா ஜெயகுமாா் முன்னிலை வகித்தாா். இதையடுத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மாவட்டத் தலைவா் கருப்புசாமி, கட்சி நிா்வாகிகள் இருகூா் சுப்பிரமணி, வீனஸ் மணி, பச்சைமுத்து, ராஜாமணி, கிருஷ்ணமூா்த்தி, தமிழ்ச்செல்வன், குருசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதேபோல, கிணத்துக்கடவு பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சாா்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் கலந்து கொண்டாா். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கந்தசாமி, மாவட்ட துணைத் தலைவா் வித்யாசாகா், கிணத்துக்கடவு வட்டாரத் தலைவா் சிவராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT