கோயம்புத்தூர்

பேராசிரியா் வீட்டில் நகை திருட்டு

DIN

கோவையில் பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து நான்கரைப் பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை, காளப்பட்டி அருகேயுள்ள பாலாஜி நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா் (32). கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது மனைவியுடன் அவரது சொந்த ஊரான அருப்புக்கோட்டைக்குச் சென்றிருந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த நான்கரைப் பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக கிருஷ்ணகுமாா் அளித்த புகாரின்பேரில் பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

SCROLL FOR NEXT