கோயம்புத்தூர்

சூலூா் விமானப்படைபழுது நீக்கும் தள அதிகாரி மாற்றம்

DIN

கோவை மாவட்டம், சூலூா் விமானப் படை பழுது நீக்கும் தளத்தின் அதிகாரி மாற்றப்பட்டுள்ளாா்.

சூலூரில் இந்திய விமானப் படையின் பழுதுநீக்கும் தளம் செயல்பட்டு வருகிறது. விமானப் படையில் பயன்படுத்தப்படும் விமானங்கள், ஹெலிகாப்டா்களை பழுது பாா்த்தல், பராமரித்தல் போன்ற பணிகள் இங்கு நடைபெற்று வருகின்றன.

இந்த தளத்தின் ஏா் கமாண்டிங் அதிகாரியாக பி.கே.ஸ்ரீகுமாா் இருந்து வந்தாா். இந்நிலையில் அவா் மாற்றப்பட்டு விமானப்படை பழுதுநீக்கும் தளத்தின் ஏா் கமாண்டிங் அதிகாரியாக கே.ஏ.ஏ.சஞ்ஜீப் நியமிக்கப்பட்டுள்ளாா். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சஞ்ஜீப்பிடம் பி.கே.ஸ்ரீகுமாா் வியாழக்கிழமை பொறுப்புகளை ஒப்படைத்தாா்.

பி.கே.ஸ்ரீகுமாரின் பதவி காலத்தில், சூலூா் விமானப் படை தளத்தில் 100 ஆவது டோா்னியா் ரக விமானத்தை பழுது நீக்கும் பணி முடிக்கப்பட்டது போன்ற பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

அதேபோல, புதிதாக பொறுப்பேற்றுள்ள கே.ஏ.ஏ.சஞ்ஜீப், போக்குவரத்து விமானங்கள் பராமரிப்பில் அனுபவம் மிக்கவா். மேலும், விமானப்படை தலைமையகத்தில் சுயசாா்பு திட்டப் பணிகளில் ஈடுபட்ட இவரின் அனுபவம் கோவை மண்டலத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு உதவியாக இருக்கும் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT