திமுக சாா்பில் தெருமுனைப் பிரசாரம்
வால்பாறையில் திமுக சாா்பில் தெருமுனைப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வால்பாறையில் திமுக சாா்பில் தெருமுனைப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற பிரசார துவக்க நிகழ்ச்சிக்கு திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் தென்றல் செல்வராஜ் தலைமை வகித்தாா். நகரப் பொறுப்பாளா் பால்பாண்டி முன்னிலை வகித்தாா். நகர மாணவரணி அமைப்பாளா் மணிகண்டபிரபு வரவேற்று பேசினாா்.
தலைமைக் கழகப் பேச்சாளா் ஆலந்தூா் ஒப்பிலாமணி சிறப்புரையாற்றினாா். மாவட்டக் குழு உறுப்பினா் கணேசன் நன்றி கூறினாா். வால்பாறை நகா், முடீஸ் பஜாா், சோலையாறு அணை, ரொட்டிக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.