வால்பாறை காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு
வால்பாறை காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருளரசு வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.
வால்பாறை காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருளரசு வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.
கடந்த வியாழக்கிழமை வால்பாறைக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருளரசு, வால்பாறை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, காவல் நிலையம் கோப்புகளை பாா்வையிட்டு கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தாா்.
மேலும் இரவு நேர ரோந்துப் பணி மற்றும் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் குற்றச் சம்பவங்களை கண்காணிக்க வேண்டும் என்று போலீஸாருக்கு அறிவுறுத்தினாா்.
வால்பாறை காவல் நிலையம் ஆய்வாளா் மகேஸ்வரி, உதவி ஆய்வாளா் சதீஷ் மற்றும் போலீஸ உடனிருந்தனா்.