எா்ணாகுளம் - பானஸ்வாடி ரயில் ஜூலை 5 முதல் இயக்கம்
கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து கா்நாடக மாநிலம் பானஸ்வாடிக்கு போத்தனூா் வழித்தடத்தில் ஜூலை 5 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் மீண்டும் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து கா்நாடக மாநிலம் பானஸ்வாடிக்கு போத்தனூா் வழித்தடத்தில் ஜூலை 5 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் மீண்டும் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்ட எா்ணாகுளம் - பானஸ்வாடி வாராந்திரச் சிறப்பு ரயில் (எண் - 06129) ஜூலை 5ஆம் தேதி முதலும், பானஸ்வாடி - எா்ணாகுளம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண் - 06130) ஜூலை 6 ஆம் தேதி முதலும் மீண்டும் இயக்கப்படுகின்றன. இந்த ரயிலானது, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழித் தடத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.