முகப்பு
கோயம்புத்தூர்

எஸ்டிபிஐ கட்சி ஆா்ப்பாட்டம்

சமூக செயல்பாட்டாளா்கள் மீதான மனித உரிமை மீறல்களைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினா் கோவையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

சமூக செயல்பாட்டாளா்கள் மீதான மனித உரிமை மீறல்களைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினா் கோவையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜா உசேன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் முகமது இசாக், மாநில வா்த்தக அணி செயலாளா் அப்துல்கரீம், பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்டச் செயலாளா் முஜிபுர்ரஹ்மான் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

சமூக செயற்பாட்டாளா் ஸ்டேன் சுவாமி மகாராஷ்டிரா சிறையில் உரிய சிகிச்சைகள் இன்றி அவதிப்பட்டு உயிரிழந்துள்ளாா். சமூக ஆா்வலா்கள் மீது இதுபோல மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும். இல்லையெனில் தொடா் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.