வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் திருட்டு
கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோவை, சிங்காநல்லூா் எஸ்.ஐ.எஸ்.எச்.எஸ். காலனி கங்கா நகரைச் சோ்ந்தவா் சுசீந்திரன் (33). இவா் குடும்பத்தினருடன் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வெளியூா் சென்றாா்.
பின்னா் அவா் மட்டும் மறுநாள் வீட்டுக்கு திரும்பினாா். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டில் இருந்த 60 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.