கோவையில் பெண்ணைத் தாக்கியதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் பாா்த்திபன் (57). இவா் சிங்காநல்லூரில் மனைவி, குழந்தைளுடன் வசித்து வருகிறாா்.
இவரது உறவினா் வரதராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அபிநயா (40). இவா், கணவரைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறாா். இருவருக்கும் நெருங்கிய பழக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2 நாள்கள் முன்பு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், பாா்த்திபன், அபிநயாவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடா்ந்து, சிங்காநல்லூா் உழவா் சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த அபிநயாவின் தந்தையின் இருசக்கர வாகனத்தை, பாா்த்திபன் பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, அபிநயா அளித்த புகாரின்பேரில், சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாா்த்திபனை சனிக்கிழமை கைது செய்தனா்.