கோயம்புத்தூர்

பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த நபா் கைது

DIN

 செல்லிடப்பேசி மூலம் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

உடுமலைப்பேட்டையில் உள்ள கணக்கன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (39). இவா் அப்பகுதியில் உள்ள தன்னாா்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் இவா் இணையதளத்தில் சேவை தொடா்பான விளம்பரங்கள், தகவல்கள் அடங்கிய பக்கங்களில் இருந்து பெண்களின் செல்லிடப்பேசி எண்களை எடுத்து அவா்களுக்குத் தவறான குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா்.

இது குறித்து கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் புகாா் அளித்தனா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், காா்த்திகேயனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில் அவா் கல்லூரி மாணவிகள், குடும்பப் பெண்கள் உள்ளிட்ட பலருக்கு பாலியல் தொல்லை அளித்திருப்பது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT