முகப்பு
தமிழ்நாடு

கிளிப்பிள்ளை போல செயல்படும் அதிமுக: தமிழச்சி தங்கபாண்டியன்

அதிமுக கிளிப்பிள்ளை போல செயல்படுகிறது என திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தது தொடர்பாக...

Updated On : 28 மார்ச், 2026 at 8:39 AM
திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் - கோப்புப் படம்
பகிர்:

அதிமுக கிளிப்பிள்ளை போல செயல்படுகிறது என திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்.23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை வெளியீடு, வேட்புமனுத் தாக்கல், தேர்தல் பிரசாரம் என அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்கள் பணிகளை செய்துவருகின்றன.

பாஜக - அதிமுக கூட்டணி குறித்து பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், “ என்டிஏ கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிருப்தியில் உள்ளார்.

அதுமட்டுமல்லாமல், இது மிகவும் பலவீனமான கூட்டணியாக உள்ளது. மத்திய அரசிடமிருந்து வரும் வழிகாட்டுதல்களை மட்டுமே அதிமுக செயல்படுத்தி வருகிறது என்பது எங்கள் நிலைப்பாடாக உள்ளது.

மேலும், தமிழகத்தின் உண்மையான பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல், தங்களுக்கு வழங்கப்படும் செயல்திட்டங்களை கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பச் சொல்கிறது அதிமுக” என அவர் விமர்சித்துள்ளார்.

summary

MP Tamilachi Thangapandian has said that the AIADMK is acting like a hawk.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.