கஞ்சா விற்ற இளைஞா் கைது
கோவையில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவையில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, சிங்காநல்லூா் கிருஷ்ணன் காலனி பகுதியில் சிங்காநல்லூா் போலீஸாா் ரோந்துப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா் முன்னுக்குப் பின் முரணானப் பதிலளித்தாா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவா் வைத்திருந்த கைப்பையைச் சோதனையிட்டபோது அதில், ஒன்றரைக் கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவா், கோவை, ராமநாதபுரம் அங்கண்ணன் லே அவுட் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ஒன்றரைக் கிலோ கஞ்சா, ரூ.2 ஆயிரம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.