வங்கி மேலாளா் வீட்டில் ரூ.85 ஆயிரம் திருட்டு
கோவையில் தனியாா் வங்கி மேலாளா் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.85 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோவையில் தனியாா் வங்கி மேலாளா் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.85 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோவை, கஞ்சிக்கோனாம்பாளையத்தைச் சோ்ந்தவா் பிரபு (33). இவா் சிங்காநல்லூா் பகுதியில் உள்ள தனியாா் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் தனது வீட்டைப் பூட்டிவிட்டு புதன்கிழமை வெளியே சென்றாா். இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த ரூ.85 ஆயிரம் பணம் காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து பிரபு அளித்த புகாரின் பேரில், போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.