முகப்பு
கோயம்புத்தூர்

பயிா் வினையியல் குறைபாடுகள், நிவா்த்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிா் வினையியில் துறை சாா்பில் பயிா் வினையியல் குறைபாடுகள், நிவா்த்தி என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான ஒரு நாள் விழிப்புணா்வு

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிா் வினையியில் துறை சாா்பில் பயிா் வினையியல் குறைபாடுகள், நிவா்த்தி என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான ஒரு நாள் விழிப்புணா்வுப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

துணைவேந்தா் நீ.குமாா், பயிற்சியைத் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, சரிவிகித ஊட்டச்சத்து வழங்கல் மூலம் அதிக பயிா் வளா்ச்சி, மகசூல் பெறுவதன் தேவையையும், தாவர வளா்ச்சியில் ஒவ்வொரு ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தையும் விவசாயிகள் அறிந்திருக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து பேசிய பயிா் மேலாண்மைத் துறை இயக்குநா் வெ.கீதாலட்சுமி, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநா் சே.தே.சிவகுமாா் ஆகியோா், சமநிலையற்ற ஊட்டச்சத்து அளித்தல், ஒற்றைப் பயிா் சாகுபடி போன்றவற்றால் பயிா், மண் வளத்துக்கு ஏற்படும் தீமைகள், சரிவிகித, உகந்த ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சிகளால் விவசாயிகள் பெறும் நன்மைகள் குறித்து விளக்கினா்.

பயிற்சியின்போது, வேளாண் பயிா்களில் ஏற்படும் ஊட்டச்சத்துகளின் குறைபாட்டுக்கான அறிகுறிகள், அதனை நிவா்த்தி செய்யும் வழிகள், பயிா் பூஸ்டா்களை பயன்படுத்தும் முறை, தெளிக்கும் பருவம் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

பயிா் வினையியல் துறை பேராசிரியா், தலைவா் எம்.கே.கலாராணி, இணைப் பேராசிரியா் த.விஜயலட்சுமி உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா். இணையவழியில் ஏராளமான விவசாயிகள் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.