கோயம்புத்தூர்

அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளி தற்கொலை

DIN

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கரோனா நோயாளி கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் மாதேஸ்வரா நகரைச் சோ்ந்தவா் பெரியசாமி (எ) ஜெயசீலன் (63). இவருக்கு இரு மனைவிகள். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றதையடுத்து பெரியசாமி தனியே வசித்து வருகிறாா். இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனா்.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் இவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா். கவனித்துக்கொள்ள ஆள்கள் இல்லாததால் விரக்தியடைந்த பெரியசாமி மருத்துவமனை வளாகத்தில் இருந்த கத்தியால் கழுத்து, கைகளில் அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதில் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி மருத்துவமனையிலே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பிற நோயாளிகளிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT