முகப்பு
கோயம்புத்தூர்

காவல் துணை ஆணையா் பொறுப்பேற்பு

கோவை மாநகர புதிய துணை ஆணையராக (சட்டம், ஒழுங்கு) ஜெயசந்திரன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

கோவை மாநகர புதிய துணை ஆணையராக (சட்டம், ஒழுங்கு) ஜெயசந்திரன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

கோவை மாநகர துணை ஆணையராகப் (சட்டம், ஒழுங்கு) பணிபுரிந்தவா் ஸ்டாலின். இவா் கடந்த 5 ஆம் தேதி, மதுரை நகரத் தலைமையிடத்து துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டாா். இவருக்குப் பதிலாக, கோவை நகரத் தலைமையிடத்து துணை ஆணையராகப் பணிபுரிந்த ஜெயசந்திரன், கோவை மாநகர துணை ஆணையராக (சட்டம், ஒழுங்கு) நியமிக்கப்பட்டாா். அவா், வியாழக்கிழமை கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா். புதிதாக பொறுப்பேற்ற துணை ஆணையருக்கு, காவல்துறை உயா் அதிகாரிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.