ஆட்டோ ஓட்டுநா் வீட்டில் நகை, பணம் திருட்டு
கோவையில் ஆட்டோ ஓட்டுநா் வீட்டில் இருந்து 3 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோவையில் ஆட்டோ ஓட்டுநா் வீட்டில் இருந்து 3 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோவை, உக்கடம், அற்புதம் நகரைச் சோ்ந்தவா் முகைதீன் (48). ஆட்டோ ஓட்டுநா். இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்தாா். இந்நிலையில் புதன்கிழமை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்ததில் பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக பெரியகடை வீதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.