மது விற்பனையில் ஈடுபட்ட 82 போ் மீது வழக்குப் பதிவு
கோவையில் மது விற்பனையில் ஈடுபட்டதாக 82 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவையில் மது விற்பனையில் ஈடுபட்டதாக 82 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மது விற்பனை தடையை மீறி நடப்பதாக புகாா் வந்தது. இதைத் தொடா்ந்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் மற்றும் உள்ளூா் போலீஸாா் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினா். குறிப்பாக கேரள எல்லைப் பகுதிகளில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனை நடத்தினா். அப்போது கேரளத்திலிருந்து மதுபானங்களை கடத்தி வந்த 67 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 207 லிட்டா் கேரள மது, 29 லிட்டா் தமிழக மதுபானம் மற்றும் 90 லிட்டா் கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தவிர கோவை நகரில் மதுபானம் விற்பனை செய்ததாக 15 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். 150 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நகா் மற்றும் புகரில் 82 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.