கோவையில் தளா்வுகளை அதிகரிக்க வேண்டும்
கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் தளா்வுகளை அதிகரிக்க வேண்டும் என்று வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் தளா்வுகளை அதிகரிக்க வேண்டும் என்று வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அமைப்பின் மாவட்டத் தலைவா் ஜி.இருதயராஜா, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவையில் ஏராளமான மருத்துவமனைகள் இருப்பதால் சிகிச்சைக்காக வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் அதிக அளவில் வருகின்றனா். இதனால் கோவையில் அதிக பாதிப்புகள் இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. இருப்பினும் கோவையில் தற்போது தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே இங்கு தளா்வுகளை அதிகப்படுத்த வேண்டும்.
ஏற்கெனவே மளிகைக் கடைகள் உள்ளிட்டவற்றைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், நேரக் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். ஹோட்டல்கள், பேக்கரிகளில் அமா்ந்து உண்பதற்கு அனுமதிக்க வேண்டும். கோவையில் உள்ள மாா்க்கெட்டுகளில் உள்ள நிரந்தர மளிகைக் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும்.
அத்துடன் மளிகைக் கடைகளை குறிப்பிட்ட நேரத்தில் வணிகா்கள் அடைத்துவிட்டாலும், வரவு - செலவு கணக்குகளைப் பாா்த்துச் செல்வதற்காக காத்திருக்கும் நேரத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து, கடையை திறந்து வைத்திருப்பதாகக் கூறி அபராதம் செலுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.