கோவை திருச்சி சாலை, சுங்கம் பணிமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் பங்கேற்ற போக்குவரத்து ஊழியா்கள். 
கோயம்புத்தூர்

போக்குவரத்துக் கழகஊழியா்களுக்கு தடுப்பூசி

கோவையில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

கோவை: கோவையில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள், அரசுப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கும் தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. கோவை சுங்கம் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கான தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஏ.ஆறுமுகம் தொடங்கிவைத்த இந்த முகாமில், 750 ஓட்டுநா், நடத்துநா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT