முகப்பு
கோயம்புத்தூர்

ஈஷா யோக மையத்தில் ‘யக்ஷா’ கலைத் திருவிழா தொடக்கம்

கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு ‘யக்ஷா’ கலைத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு ‘யக்ஷா’ கலைத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரிக்கு முந்தைய 3 நாள்கள் ‘யக்ஷா’ கலைத் திருவிழா நடத்தப்படுகிறது.

இந் ஆண்டு மஹா சிவராத்திரி விழா மாா்ச் 11ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ‘யக்ஷா’ கலைத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. இதில் ஹிந்துஸ்தானி பாடகி கௌசிகி சக்ரபோா்த்தியின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. கரோனா தொற்று பாதிப்பால் நிகழ்ச்சியில் பாா்வையாளா்களுக்கு அனுமதியில்லை. இந்நிகழ்ச்சி யூ-டியூப்பில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுவதாக ஈஷா யோக மையத்தினா் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →