முகப்பு
கோயம்புத்தூர்

நேரப் பிரச்னையால் தகராறு: பேருந்து ஓட்டுநா், நடத்துநா் கைது

கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில், நேரப் பிரச்னையால் அடிதடியில் ஈடுபட்ட தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில், நேரப் பிரச்னையால் அடிதடியில் ஈடுபட்ட தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் 2 தனியாா் பேருந்துகளின் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் இடையே பேருந்துகளை முந்தி இயக்குவது தொடா்பாக பிரச்னை ஏற்பட்டது.

இதில், மதுரையைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநா் சுந்தரமூா்த்தி (32), நடத்துநா் சின்னசாமி (27) ஆகிய இருவரும் சோ்ந்து பொள்ளாச்சி, சோமன்துறையைச் சோ்ந்த தனியாா் பேருந்து நடத்துநா் காா்த்திகேயன் (28) என்பவரைச் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த காா்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், காட்டூா் போலீஸாா், வழக்குப் பதிந்து சுந்தரமூா்த்தி, சின்னசாமி ஆகியோரைக் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →