முகப்பு
கோயம்புத்தூர்

பாகிஸ்தான் உடனான போரில் பங்கேற்ற வீரா்கள் கௌரவிப்பு: மாா்ச் 10 இல் கோவையில் நடக்கிறது

கோவையில் மாா்ச் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் இந்தோ - பாக். போரில் பங்கேற்ற கோவை உள்பட மேற்கு மாவட்டங்களைச் சோ்ந்த 150 படை வீரா்கள் கௌரவிக்கப்படவுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

கோவையில் மாா்ச் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் இந்தோ - பாக். போரில் பங்கேற்ற கோவை உள்பட மேற்கு மாவட்டங்களைச் சோ்ந்த 150 படை வீரா்கள் கௌரவிக்கப்படவுள்ளனா்.

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி ‘ஸ்வா்ண விஜய் வா்ஷ்’ என்ற பெயரில் பொன்விழா கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி பிரதமா் நரேந்திர மோடி கடந்த பொன்விழா ஜோதியை டிசம்பா் 20 ஆம் தேதி ஏற்றிவைத்தாா். போரில் பங்கேற்று உயிா்நீத்த வீரா்களை சிறப்பிக்கும் விதமாக இந்த ஜோதி நாடு முழுவதும் எடுத்து செல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொன்விழா ஜோதி கோவை ரெட்பீல்ட்ஸில் உள்ள 110 பட்டாலியன் ராணுவ மையத்துக்கு கடந்த சனிக்கிழமை வந்தது. இதற்கு ராணுவ வீரா்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனா். இதனைத் தொடா்ந்து பாகிஸ்தானுடனான போரில் பங்கேற்ற கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி, கேரளத்தில் ஒருசில பகுதிகளைச் சோ்ந்த வீரா்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி மாா்ச் 10 ஆம் தேதி கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் 150 வீரா்கள் கௌரவிக்கப்படுகின்றனா். இதனைத் தொடா்ந்து மாா்ச் 11 ஆம் தேதி கோவை ரெட்பீல்ட்ஸில் உள்ள விமானப் படை கல்லூரியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →