முகப்பு
கோயம்புத்தூர்

புகையிலைக் கட்டுப்பாட்டு மையம்: அரசு மருத்துவமனையில் திறப்பு

புகையிலைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களை மீட்பதற்காக கோவை அரசு மருத்துவமனையில் புகையிலை கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

புகையிலைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களை மீட்பதற்காக கோவை அரசு மருத்துவமனையில் புகையிலை கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் புகையிலைப் பயன்பாடு, பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் புகையிலைப் பொருள்கள் விற்பனைக் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு அலகு அமைக்கப்பட்டுள்ளது. இவா்கள் புகையிலைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் புகையிலைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களை மீட்பதற்காக மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு அலகு சாா்பில் கோவை அரசு மருத்துவமனையில் கட்டுப்பாட்டு மையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை கோவை அரசு மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா திறந்துவைத்தாா். இங்கு புகையிலைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அதில் இருந்து வெளியேறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். இதற்காக மனநல ஆலோசகா் ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளாா். அனைத்து நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இம்மையம் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →