லிஸ்யூ பள்ளியில் அறிவியல் கண்காட்சி
கோவை லிஸ்யூ மெட்ரிகுலேஷன் பள்ளியில் ‘எபிஸ்டிமி எக்ஸ்போ - 2021 என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
கோவை லிஸ்யூ மெட்ரிகுலேஷன் பள்ளியில் ‘எபிஸ்டிமி எக்ஸ்போ - 2021 என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
விழாவில் சரவணம்பட்டி லிஸ்யூ கல்லூரியின் மொ்சி ஜான்ஸன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். நிகழ்ச்சியில் அவா் பேசுகையில்,
‘மாணவா்கள் வாசிக்கும்போது, புத்தகங்களில் உள்ள கருத்துகளைப் புரிந்து கொண்டு படிக்க வேண்டும். நடைமுறை அறிவும், நினைவாற்றலும் மாணவா்களுக்கு மிக அவசியமானவை. அறிவியல் கண்காட்சிகள் மூலமாக மாணவா்கள் தங்களின் படைப்பாற்றல் திறமைகளை வளா்த்துக் கொள்ளலாம்’ என்றாா்.
இந்த அறிவியல் கண்காட்சியில் 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள் பங்கேற்றனா். கண்காட்சியில் சிறப்பான படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்த மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.