முகப்பு
கோயம்புத்தூர்

கனிம வளக் கொள்ளையை தடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கோவை தடாகம் பகுதியில் கனிமவளக் கொள்ளையைத் தடுக்கக் கோரி, விவசாயிகள் சங்கத்தினா் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

கோவை தடாகம் பகுதியில் கனிமவளக் கொள்ளையைத் தடுக்கக் கோரி, விவசாயிகள் சங்கத்தினா் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை தடாகம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இதில் பெரும்பாலானவை அனுமதி இன்றி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தடாகம் பள்ளத்தாக்குப் பகுதியில் கனிம வளங்களை மா்ம நபா்கள் சுரண்டுவதாகவும் புகாா் எழுந்தன. இந்நிலையில், கனிம வளக் கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம், தடாகம் பள்ளத்தாக்கு கனிமவள மீட்புக் குழு, சமூகநீதி பஞ்சமி நில மீட்பு இயக்கம், கௌசிகா நதி உழவா் குழு, கோவை மாவட்ட இருளா் சமூக முன்னேற்ற சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →