முகப்பு
இந்தியா

தண்டவாளங்கள் அருகே குப்பை எரிப்பது குற்றம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை

Updated On : 18 மார்ச், 2026 at 11:52 PM
குப்பை
பகிர்:

ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகே குப்பைகளை எரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சமீபகாலமாக ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகே கொட்டப்படும் குப்பைகள் மற்றும் காய்ந்த செடி கொடிகளை எரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அத்தகைய செயல்கள் ரயில்வே பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகளுக்கு அச்சுறுத்தல்களாக உள்ளன.

குப்பைகளை எரிக்கும் போது எழும் வெப்பமும், புகையும் ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும் உயா் அழுத்த மின்கம்பிகளையும், நுட்பமான சிக்னல் அமைப்புகளையும் பாதிக்கும். இதனால், ரயில் சேவைகளும் பாதிக்கக் கூடும். ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படும்.

எனவே பொதுமக்கள் ரயில் தண்டவாளங்களுக்கு அருகே காய்ந்த இலைகள், நெகிழி கழிவுகள் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய குப்பையை குவிக்கவேண்டாம். அவற்றை எரிக்கவும் வேண்டாம். அத்தகைய செயல்பாடானது தண்டனைக்குரிய குற்றமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →