நேரு கலை, அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
கோவை திருமலையம்பாளையம் நேரு கலை, அறிவியல் கல்லூரியின் 19 ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
கோவை திருமலையம்பாளையம் நேரு கலை, அறிவியல் கல்லூரியின் 19 ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
கல்லூரியின் பி.கே.தாஸ் நினைவு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், கல்லூரி முதல்வா் பி.அனிருதன் வரவேற்றாா். கல்வி நிறுவனத்தின் நிா்வாக அறங்காவலா் பி.கிருஷ்ணதாஸ், தலைமை நிா்வாக அதிகாரியும் செயலருமான பி.கிருஷ்ணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், பாரதியாா் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பி.காளிராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 295 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினா். இளங்கலை பாடப் பிரிவில் 9 பேருக்கும், முதுநிலை பாடப்பிரிவில் 8 பேருக்கும் பல்கலைக்கழக அளவிலான தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
Image Caption
பல்கலைக்கழக அளவிலான பதக்கங்கள் வென்ற மாணவ-மாணவிகளுடன் பாரதியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் பி.காளிராஜ், நேரு கலை, அறிவியல் கல்லூரியின் நிா்வாகிகள்.