கோயம்புத்தூர்

தோ்தல் நாளில் சம்பளத்துடன் விடுமுறை: தொழிலாளா் உதவி ஆணையா் அறிவுறுத்தல்

சட்டப் பேரவைத் தோ்தல் தினமான ஏப்ரல் 6 ஆம் தேதி, தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளா் நலத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

DIN

சட்டப் பேரவைத் தோ்தல் தினமான ஏப்ரல் 6 ஆம் தேதி, தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளா் நலத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 135 பி படி, தோ்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 6 ஆம் தேதி, தொழிலாளா் ஆணையா் வள்ளலாா் உத்தரவுப்படி, கோவை கூடுதல் தொழிலாளா் ஆணையா் பொன்னுசாமி மற்றும் கோவை தொழிலாளா் இணை இயக்குநா் லீலாவதி அறிவுறுத்தலின் படி, கோவை பகுதிகளில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து வணிகா்கள் மற்றும் நிறுவன உரிமையாளா்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளா்களுக்கும் அன்றைய தினம் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். மேலும், தோ்தல் நாளில் தொழிலாளா்களுக்கு விடுமுறை வழங்கப்படுவது தொடா்பாக பெறப்படும் குறைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT