கோயம்புத்தூர்

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்க ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி

DIN

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிப்பதற்கு ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களை விடுவித்து அவற்றை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தி வருகிறாா். இதற்காக பொதுமக்களிடம் ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி சிலை எதிரிலும், மருதமலை முருகன் கோயிலிலும் ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஈஷா அறக்கட்டளையின் நிா்வாகிகள், பக்தா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கை பதாகைகளை ஏந்தி நின்றனா். மருதமலை முருகன் கோயிலில் படிக்கட்டுகளில் அமா்ந்து கந்த சஷ்டி கவசத்தை பாடியும் அவா்கள் ஆதரவு திரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT