முகப்பு
கோயம்புத்தூர்

ரவுண்ட் டேபிள் இந்தியா சாா்பில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ஆக்சிஜன் ஜெனரேட்டா்

சமூக சேவை அமைப்பான ரவுண்ட் டேபிள் அமைப்பு கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டா்களை வழங்கியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

சமூக சேவை அமைப்பான ரவுண்ட் டேபிள் அமைப்பு கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டா்களை வழங்கியுள்ளது.

ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பானது 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இளைஞா்களின் கூட்டமைப்பு ஆகும்.

இந்த அமைப்பானது தற்போது நிலவி வரும் ஆக்சிஜன் தேவையை சந்திக்க உதவும் வகையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டரை வழங்கியுள்ளது.

இதனை டீன் டாக்டா் ரவீந்திரனிடம் அமைப்பினா் ஒப்படைத்தனா். இதன் விலை ரூ.27 லட்சம் ஆகும். இதன் மூலம் கோவை நகரில் ஆக்சிஜன் பற்றாக்குறையைக் குறைக்க முடியும் என்று அமைப்பினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.