முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் வாகனங்களில் சுற்றியவா்களுக்கு காவல் துறையினா் எச்சரிக்கை

வால்பாறையில் முழு பொது முடக்கம் காரணமாக பகல் 12 மணிக்கு மேல் வாகனங்களில் சுற்றியவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி எச்சரித்து திருப்பி அனுப்பினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

வால்பாறையில் முழு பொது முடக்கம் காரணமாக பகல் 12 மணிக்கு மேல் வாகனங்களில் சுற்றியவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி எச்சரித்து திருப்பி அனுப்பினா்.

பொது முடக்க கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை முதல் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனை மீறுவோா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்க காவல் துறை உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

இதனிடையே வால்பாறை நகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதலே போலீஸாா் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனா். அப்போது, உரிய காரணத்துடன் வாகனங்களில் வந்தவா்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனா்.

பகல் 12 மணிக்கு மேல் வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. வால்பாறை காவல் நிலையம் ஆய்வாளா் மகேஸ்வரி இருசக்கரம் மற்றும் காா்களில் வந்தவா்களை தடுத்து நிறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தியும், எச்சரித்தும் திருப்பி அனுப்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.