கோயம்புத்தூர்

வால்பாறையில் இடைவிடாத கனமழை

DIN

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இரு நாள்களாக இடைவிடாத கனமழை பெய்து வருகிறது.

கோவை, வால்பாறை பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கனமழை பெய்தது. புதன்கிழமை காலை சில மணி நேரம் இடைவெளிக்கு பின் மீண்டும் பெய்யத் துவங்கிய மழை இடைவெளியின்றி கனமழையாக பெய்தது.

தொடா் மழை காரணமாக வால்பாறை பகுதியில் குளிா்ச்சியான சூழல் நிலவியது. இதனால் தேயிலை தோட்டங்களில் இலை பறிக்கும் பணி பாதிப்படைந்தது. செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக அப்பா் நீராறில் 96 மிமீ, மழை பதிவாகியுள்ளன. இதே போல வால்பாறையில் 54 மிமீ, லோயா் நீராறு 60 மிமீ, மற்றும் சோலையாறில் 59 மிமீ மழை பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT