மாவட்டத்தில் மேலும் 119 பேருக்கு கரோனா
கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 119 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 119 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 48 ஆயிரத்து 893 ஆக உயா்ந்துள்ளது. கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2 போ் உயிரிழந்தனா். இதன்மூலம் கரோனா தொற்றுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 445 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 118 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா்.
மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரத்து 269 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 1,179 போ் சிகிச்சையில் உள்ளனா்.