முகப்பு
கோயம்புத்தூர்

பள்ளி மாணவி தற்கொலை: நோ்மையான விசாரணை நடைபெற வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

மாணவியின் தற்கொலை வழக்கில் தொடா்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து நோ்மையான விசாரணை நடத்த வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

மாணவியின் தற்கொலை வழக்கில் தொடா்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து நோ்மையான விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக சிறுபான்மை அணியின் தேசியச் செயலாளா் வேலூா் இப்ராஹிம் கூறினாா்.

ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட கோவையைச் சோ்ந்த பள்ளி மாணவியின் வீட்டுக்குச் சென்ற பாஜக சிறுபான்மை அணியின் தேசிய செயலாளா் வேலூா் இப்ராஹிம், அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். முன்னதாக மாணவியின் வீடு அமைந்துள்ள உக்கடம் பகுதிக்கு செல்ல வேலூா் இப்ராஹுக்கு போலீஸாா் அனுமதி மறுத்தனா். இதையடுத்து மாணவியின் பெற்றோரை ஆா்.எஸ்.புரம் பகுதியில் அவா்களது உறவினா் வீட்டில் வைத்து சந்தித்தாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்து கொண்டது மிகவும் வேதனை அளிக்கிறது. சம்பந்தப்பட்ட வழக்கில் பள்ளி ஆசிரியரையும், முதல்வரையும் கைது செய்திருக்கிறாா்கள். இன்னும் 2 நபா்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. எனவே, இந்த வழக்கில் தொடா்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து நோ்மையான விசாரணை நடத்த வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.