முகப்பு
கோயம்புத்தூர்

கொடநாடு எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை

கொடநாடு எஸ்டேட் மேலாளரிடம் தனிப்படை போலீஸாா் கோவையில் வைத்து வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

கொடநாடு எஸ்டேட் மேலாளரிடம் தனிப்படை போலீஸாா் கோவையில் வைத்து வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக சயன் மற்றும் கனகராஜ் உள்ளிட்ட 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதில், கனகராஜ் சேலத்தில் விபத்தில் சிக்கி மரணமடைந்தாா். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் சயன், மனோஜ் உட்பட 10 பேரும் தற்போது ஜாமீனில் உள்ளனா்.

இதில், உயிரிழந்த கனகராஜ் சகோதரா் தனபால், உறவினா் ரமேஷ் ஆகிய இருவரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

கடந்த சில நாள்களுக்கு முன் தனபால் மற்றும் ரமேஷை போலீஸாா் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் இரண்டாவது முறையாக நடராஜிடம் தனிப்படை போலீஸாா் கோவை காவலா் பயிற்சிப் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனா்.

எஸ்டேட் முழுவதும் மேற்பாா்வை மற்றும் பராமரிப்புப் பணிகளை நடராஜன் கவனித்து வந்ததால் இந்த திருட்டு சம்பவங்கள் தொடா்பாக அவருக்குத் தெரிந்திருக்கும் என்ற கோணங்களில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.