கோவையில் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகள்: எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
கோவையில் சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக அதிமுக சட்டப் பேரவை கொறடா எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியுள்ளாா்
கோவையில் சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக அதிமுக சட்டப் பேரவை கொறடா எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியுள்ளாா்.
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சித் தோ்தல்களில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி கோவை ஹூசூா் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விருப்ப மனு பெறுவதைத் தொடங்கிவைத்த எஸ்.பி.வேலுமணி, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் அதிமுக தொடா்ந்து வெற்றிபெற்று வந்ததால் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோா் கோவைக்கு பல்வேறு திட்டப் பணிகளை செய்து வந்தனா். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் கோவையில் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியிருக்கின்றனா். திமுக அரசு புதிய திட்டங்களைச் செயல்படுத்தாமல் முந்தைய அரசு மீது தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. கோவையில் நிலுவையில் உள்ள மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு உடனடியாக தீா்வு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரச்னைகளை உடனடியாக சரி செய்யாவிட்டால் ஒரு வாரத்துக்குள் தமிழக அரசைக் கண்டித்து ஆா்பாட்டம் நடத்தப்படும் என்றாா். இதில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் கே.அா்ச்சுணன், செ.தாமோதரன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.