அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்தது!
அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்துள்ளது பற்றி...
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ளது.
அதன்படி, என்டிஏ கூட்டணியில் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணச்சநல்லூர், ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளைக் கேட்டுள்ளதாகவும் இதில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கட்சியின் தலைவர் ஆர்.வி. பரதன் கூறியுள்ளார். அதிமுக ஒதுக்கும் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, என்டிஏ கூட்டணியில் ஸ்ரீரங்கம் தொகுதியை பாஜக கேட்டு வந்த நிலையில் பாஜகவிற்கு ஒதுக்கப்படவில்லை. ஸ்ரீரங்கத்தில் அதிமுகவே போட்டியிட வாய்ப்புள்ளது.
திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11, தமாகாவுக்கு 5, ஐஜேகேவுக்கு 2 தொகுதிகள், புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று(மார்ச் 25) வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.