FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திமுக, அதிமுக புறக்கணித்திருப்பது புதிய நட்புக்கான முடிவாக இருக்கலாம்! ராஜ்மோகன்

அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை திமுக, அதிமுக புறக்கணித்திருப்பது பற்றி அமைச்சர் ராஜ்மோகன் கருத்து

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 2:16 pm IST
அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப்படம்
பகிர்:

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் திமுக, அதிமுக கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது மாநில நலனில் அக்கறையின்மையை காட்டுகிறது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

சென்னையி செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என்பது கிடையாது. ஆரம்பம் முதலே நாங்கள் தொகுதி மறுவரையறையை எதிர்த்து வருகிறோம். இது மாநில பிரச்னை. மாநில உரிமைக்கான பிரச்னையில் அவர்கள் கலந்துகொள்ள மறுப்பது என்பது முறையன்று. மாநில உரிமைகள் மீதான அவர்களின் அக்கறையின்மையை இது வெளிப்படுத்துகிறது.

Advertisement

Advertisement

காவிரி விவகாரத்தை யாரும் திசைதிருப்ப முடியாது. அதற்காக இந்த கூட்டம் நடத்தப்படவில்லை. இதற்கு முன்னதாகவும் இதுபோன்ற கூட்டங்கள் நடந்துள்ளன.

திமுக காவிரி விவகாரத்தை காண்பித்து சுயநல அரசியல் செய்கின்றனர்.

எம்.பி.க்கள் கூட்டத்தை திமுகவும் அதிமுகவும் புறக்கணித்திருப்பது அவர்களின் சொந்த முடிவாக இருக்கலாம். அவர்களின் புதிய நண்பர்களுக்கான சுயமுடிவாக இருக்கலாம்.

இன்று நடப்பதும் அனைத்துக் கட்சி கூட்டம்தானே? அவர்கள் ஏன் வரவில்லை. அல்லது நேற்று சட்டப்பேரவையிலேயே ஒரு சிறப்புத் தீர்மானம் வேண்டும் என்று கேட்டிருக்கலாமே" என்றார்.

summary

Rajmohan comments on the DMK and AIADMK have boycotted all party MPS meeting

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments