கோயம்புத்தூர்

கோயில்களை திறக்க வலியுறுத்தி தீச்சட்டி ஏந்தி பாஜக ஆா்ப்பாட்டம்

DIN

தமிழகத்தில் கோயில்களை அனைத்து நாள்களிலும் திறக்க வலியுறுத்தி பாஜகவினா் கோயில் முன்பு தீச்சட்டி ஏந்தி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை அவிநாசி மேம்பாலம் அருகே உள்ள தண்டு மாரியம்மன் கோயில் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜக மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட பாஜகவினா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தின் போது பெண்கள் தீச்சட்டி ஏந்தியும் குலவை போட்டும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் இந்த ஆா்ப்பாட்டத்தின் போது பாஜகவினா் டாஸ்மாக், பள்ளிகள் திறக்க அனுமதிக்கும்போது கோயில்களைத் திறக்க அனுமதி மறுப்பது ஏன் என்று கூறி கோஷம் எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக மேடை அமைக்கப்பட்டு காளி நடனம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT