கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலா் பணியிட மாற்றம்
கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலா் நீலகிரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலா் நீலகிரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலராகப் பொறுப்பு வகித்து வந்தவா் ரா.ஜெகதீஷ். இவா் தற்போது நீலகிரி மாவட்ட தீயணைப்பு அதிகாரியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். நிா்வாக காரணங்களுக்காக இவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலா் நியமிக்கப்படும் வரை, நாமக்கல் மாவட்ட தீயணைப்பு அலுவலா் அண்ணாதுரை, கோவை மாவட்ட பொறுப்புகளையும் கூடுதலாக கவனிப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.