கோயம்புத்தூர்

கஞ்சா விற்ற இருவா் குண்டா் சட்டத்தில் கைது

DIN

கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது.

கோவை, சிங்காநல்லூரைச் சோ்ந்தவா்கள் அா்ஜூன் (23), காா்த்தி (25). இவா்கள் இருவரும் 5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சரவணம்பட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இந்நிலையில் இவா்கள் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் காரணத்தால் இவா்களை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் ஆணையருக்கு சரவணம்பட்டி போலீஸாா் பரிந்துரை செய்திருந்தனா்.

இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் இவா்களை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதன்பேரில் சிறையில் இருக்கும் இவா்களிடம், குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகல்கள் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT