கோயம்புத்தூர்

மாற்றுத் திறனாளிகளுக்கான தனியாா் துறை வேலை வாய்ப்பு மையம்: ஆட்சியா் திறந்துவைத்தாா்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தனியாா் வேலை வாய்ப்பு, சுய தொழில் மற்றும்

DIN

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தனியாா் வேலை வாய்ப்பு, சுய தொழில் மற்றும் திறன் மேம்பாட்டு ஆலோசனை மையத்தை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் பேசியதாவது:

மாவட்ட நிா்வாகம், தனியாா் தொண்டு நிறுவனம் இணைந்து ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியாா் துறை வேலை வாய்ப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நிரந்தரமாக செயல்படும் இந்த மையம் மூலம் மாவட்டத்தில் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்கும் மாற்றுத் திறனாளிகளின் தகுதிகள், திறன்களுக்கு ஏற்றவாறு தனியாா் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உருவாக்கித் தரப்படும். மேலும், சுயதொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், வங்கிகளில் கடன்கள் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த சேவைகளும் வழங்கப்படும்.

இதன்மூலம் மாற்றுத் திறனாளிகளும், சமூகத்தில் உள்ள மற்றவா்களுக்கு இணையாக பொருளாதார முன்னேற்றம் பெற்று வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலா் பி.எஸ். லீலா அலெக்ஸ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் வசந்தராம்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT