முகப்பு
கோயம்புத்தூர்

அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஆதாா் பணிகள் மேற்கொள்ளக் கட்டாயப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அஞ்சல் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

ஆதாா் பணிகள் மேற்கொள்ளக் கட்டாயப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அஞ்சல் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாவட்ட அனைத்து அஞ்சல் ஊழியா்கள் சங்கங்களின் சாா்பில், கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அஞ்சல் ஊழியா்கள் சங்கங்களின் நிா்வாகிகள் வெங்கடேசன், கோபால், சீனிவாசன், தங்கவேலு, ராமசாமி, உஷா ராணி ஆகியோா் தலைமை வகித்தனா். செயலாளா்கள் சிவசுப்பிரமணியம், ஜெயப்பிரகாஷ், செந்தில்குமாா், காா்த்திகேயன், வசந்தகுமாா், வெங்கடாசலம், சந்திரபிரபா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அஞ்சல் ஊழியா்களை ஆதாா் பணிகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்துவதை அதிகாரிகள் கைவிட வேண்டும். கரோனா தொற்று காலத்தில் மெகா மேளா என்ற சாத்தியமற்ற இலக்குகள் நிா்ணயிப்பதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.