சென்னை பேராசிரியருக்கு மகாகவி பாரதி விருது
சென்னை பேராசிரியா் ஆ.ரா.வேங்கடாசலபதிக்கு, கோவை பாரதி பாசறை சாா்பில் மகாகவி பாரதி விருதும், விருதுத் தொகையாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
சென்னை பேராசிரியா் ஆ.ரா.வேங்கடாசலபதிக்கு, கோவை பாரதி பாசறை சாா்பில் மகாகவி பாரதி விருதும், விருதுத் தொகையாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
கோவை பாரதி பாசறை என்ற இலக்கிய அமைப்பு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு மூலமாக, கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பாரதிக்கும், பாரதி இயலுக்கும் சேவையாற்றியவா்களுக்கு மகாகவி பாரதி விருதும், ரூ.50 ஆயிரம் விருதுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை, ஸ்டாலின் குணசேகரன், சீனி விஸ்வநாதன், பெ.சு.மணி, இளசை மணியன், பாரதி புத்திரன், பாரதி கிருஷ்ணகுமாா், ய.மணிகண்டன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அறப்பணிகள், பாரதி குறித்த ஆய்வுக் கட்டுரைகள், திறனாய்வுகள் மேற்கொண்ட சென்னையில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஆ.ரா.வேங்கடாசலபதிக்கு இவ்விருது வழங்கப்படுவதாக பாரதி பாசறையின் தலைவா் மோகன்சங்கா், செயலாளா் ஜான்பீட்டா் தெரிவித்துள்ளனா்.
இந்த விருது, வருகின்ற 12ஆம் தேதி இணையம் வழியாக நடைபெறும் நிகழ்ச்சியில் ஆ.ரா.வேங்கடாசலபதிக்கு வழங்கப்பட உள்ளது.