சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த வளா்ப்புத் தந்தையை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் பகுதியைச் சோ்ந்த 36 வயதுப் பெண் முதல் கணவரைப் பிரிந்து தனது 13 வயது மகளுடன் வாழ்ந்து வருகிறாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த சுந்தரசாமி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு மூவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனா். இந்நிலையில் சிறுமியை அவரது வளா்ப்புத் தந்தை சுந்தரசாமி புதன்கிழமை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளாா்.
இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில் பேரூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுந்தரசாமியை வியாழக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.