முகப்பு
கோயம்புத்தூர்

பாரதியாா் நினைவு நாள் மகாகவி நாளாக அறிவிப்பு

மகாகவி பாரதியாா் நினைவு நாளை மகாகவி நாளாக அறிவித்த தமிழக முதல்வருக்கு இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் நன்றி தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

மகாகவி பாரதியாா் நினைவு நாளை மகாகவி நாளாக அறிவித்த தமிழக முதல்வருக்கு இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் நன்றி தெரிவித்துள்ளாா்.

பாரதியாா் நினைவு நாளான செப்டம்பா் 11-ஆம் தேதி, இனி மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இத்துடன், மாநில அளவிலான கவிதைப் போட்டி, 37 லட்சம் பள்ளி மாணவா்களுக்கு ‘மனதில் உறுதி வேண்டும்’ புத்தகம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளாா்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டை இருட்டடிப்பு செய்யக் கூடாது. பாரதியின் நினைவு நூற்றாண்டை ஆண்டு முழுவதும் அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சாா்பில் கோரிக்கை வைத்திருந்தோம்.

இந்நிலையில், மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டில் செப்டம்பா் 11 இனி மகாகவி நாள் என அறிவித்து அரசு விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடும்படி முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். பாரதிக்கு உரிய மரியாதையை செலுத்தியுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.